Monday, April 14, 2008

புதுவருடம்

மலர்ந்ததோ புதுவருடம்- ஆனால்
தொடருவதோ போருலகம்

துடிக்கின்றோம் நிமிடமெல்லாம் எதற்காக
வாழ்வதற்கா? வழித்துணைக்கு

நமக்குமேல் ஒரே கடவுள்
நடத்துகின்ற நாடகமா இது

நிச்சயமாக இல்லை - மனித
நாடகத்தின் ஒரு வடிவமே இது

பேராசை குடிகொண்ட பே்தையர்கு-மாற்றான்
பொன் ஆசை
பொருள் ஆசை
நிலத்தாசை

இதுக்காக ஏனிந்த உயிராசை?

அடுத்தவனை அழித்தொழித்து
அங்கு அரசமைத்து ......


எதற்காக இந்த ஒத்திகைகள்!!
மக்களின் வாழ்க்கையை சூறையாடி
சொந்த நாட்டையே ஏலமிட்டு
்வேடிக்கை காட்டும் மன்னர்களின்
நாடக ஒத்திகை!!

மன்னர்களுக்கோ கொண்டாட்டம்
மக்களுக்கோ திண்டாட்டம்

இலங்கைகுயின் விடிவு
மக்கள் கைகளிலே-அன்றி
மன்னர்கள் கைகளில் அல்ல


தங்கத்தில் மிதப்பவர்கு தெரியுமோ
தாகத்தின் அருமை

நாட்டு மக்களே ஒன்று படுங்கள்
அடுத்தவனை நம்முள் ஒருவனே
என்று நன்றே செய்யுங்கள்
நாளை நமதே!!
நாடும் நமதே!!

வரும்........

No comments: