Thursday, February 26, 2009

மாயை

மாயை......

ஏன் இந்த வாழ்க்கை-இது
யார் தந்த வாழ்க்கை


காலம் கலி காலம்-அதில்
மக்கள் பலிக் கோலம்

மக்களின் கொலைக்களம் - சில
பேய்களின் களிப்பிடம்


இனத்தை வேறறுக்க - பல
வெறியாட்டம் நரியாட்டம்


மாற்றான் அழிவைக் கூறி
நடக்கும் நயவ சக நாடகம்
அதுவே அழிவுக்கன அடித்தளம்
முடிவிற்கு முதல்ப் படி

உரிமையின் நிலையோ ?

விடியாத இரவாக
கழியாத கனவாக
தணியாத தாகமாக
முடியாத முடிவாக

நீதியின் விலங்குப்பிடியில்
நீதியோ நரிகளின் கைப்பிடியில்


நடப்பதெல்லாம் மயையன்றோ!

ஆனால்......!

உலமே அழி ந்(த்)தாலும்
உறையாது உரம்
மறையாது இனம்
குறையாது குணம்
!

<<<<<வரும்>>>>>